ஜி.எஸ்.டி வசூல்

நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில் மொத்த ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,51,718 கோடி வசூலாகியுள்ளது. இந்த ஜி.எஸ்.சி வசூலானது, கடந்த ஏப்ரல் மாதம் வசூலான ரூ.1,67,540 கோடிக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய தொகையாகும். ஜி.எ.ஸ்டி வரி வசூல் தொடர்ந்து 8வது முறையாக ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, வரி வசூல் 2வது முறையாக ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இதில் மத்திய சி.ஜி.எஸ்.டி’யாக ரூ. 26,039 கோடி, மாநில எஸ்.ஜி.எஸ்.டி’யாக ரூ. 33,396 கோடி, ஒருங்கிணைந்த ஐ.ஜி.எஸ்.டி’யாக ரூ. 81,778 கோடி, செஸ் வசூலாக ரூ.10,505 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத ஜி.எஸ்.டி வருவாய் வசூலுடன் ஒப்பிடுகையில், பல மாநிலங்களிலும் ஜி.எஸ்.டி வருவாய் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாய் 25 சதவீதம் உயர்ந்து ரூ. 9,540 கோடியாக உள்ளது.