அறநிலையத்துறை பெயரில் வசூல் வேட்டை

கிருஷ்ணகிரி காட்டினாயனப்பள்ளி அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேய சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஹிந்து சமய அறநிலைத்துறையினர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆட்களை வைத்து கடைகளில் பணம் வசூல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து இந்த வசூல் வேட்டையில், சட்டவிரோதமாக ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்யக்கோரி இந்து முன்னணி அமைப்பின் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.