கேதார்நாத்தில் தூய்மைப்பணி

மனத்தின் குரல் நிகழ்ச்சியில் புனித யாத்திரை தலங்களில் தூய்மையை உறுதி செய்யுமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து  சார் தாம் யாத்திரை சென்றுள்ள யாத்ரீகர்கள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து கேதார்நாத் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை செய்யும் பணிகளை மேற்கொண்டனர். கேதார்நாத் மாவட்ட நிர்வாகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான சுலப் இன்டர்நேஷனல் ஊழியர்கள் கேதார்நாத் பகுதியில் இருந்து டன் கணக்கில் குப்பைகளை சேகரித்தனர். கௌரிகுண்ட், சோன்பிரயாக் மற்றும் கேதார்நாத் செல்லும் வழியில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் தூய்மை இயக்கத்தில் பங்கேற்றனர்.