அனுமதியில்லா சர்ச்

தூத்துக்குடியில் அனுமதியின்றி கிறிஸ்தவ மதபோதக கூடம் கட்டப்படுவதாக இந்து முன்னணி மாவட்ட தலைவர் சார்பில் தாசில்தாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த புகாரில், ‘தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே, பெரியநாயகிபுரம் மெயின் ரோட்டில் தொழிற்சாலை போன்று ஒரு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது அதனை கிறிஸ்தவ மத போதனை கூடமாக மாற்றியுள்ளனர். அரசிடம் எவ்வித அனுமதியின்றி குடியிருப்பு பகுதியில் இது அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற அனுமதியற்ற போதனை கூடத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.