அரசு நிலத்தில் சர்ச்

துாத்துக்குடி ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜவேல், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘துாத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் மடத்துாரில் உள்ள அரசு நிலத்தில் அனுமதியின்றி சி.எஸ்.ஐ சர்ச் கட்டுமானம் நடைபெற்றது. மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசுக்கு புகாரும் அனுப்பப்பட்டது. சமாதான கூட்டம் நடத்தப்பட்டு கட்டுமானம் மேற்கொள்ளமாட்டோம் என சர்ச் நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால், உறுதியளித்ததை மீறி கட்டுமானம் நடந்துவருகிறது. துாத்துக்குடி ஆட்சியர், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சர்ச் கட்டுமானத்தை நிறுத்தி அதனை திறக்க தடை விதிக்க வேண்டும். கட்டடத்தை அகற்ற உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், அரசு தரப்பு இதுகுறித்து பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.