மலையை ஆக்கிரமித்து சர்ச்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த இளையாங்கண்ணி கிராமத்தில், மலை மீது கார்மேல் மாதா சர்ச், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது, சட்டவிரோதமாக மலை உச்சியை சமன் செய்து, சர்ச் விரிவாக்கப் பணியை சர்ச் நிர்வாகம் செய்து வருகிறது. இதனை துவக்கி வைத்தவர் செங்கம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கிரி. இந்நிலையில், அக்கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். அப்போது சர்ச் நிர்வாகம் மலையில் செய்யும் விரிவாக்கப் பணியை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அதிகாரிகளிடம், மலையை ஆக்கிரமித்து விரிவாக்கம் செய்ய யார் அனுமதி கொடுத்தது, மலை வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ளதா, சர்ச் இடத்திற்கு பட்டா உள்ளதா என கேட்டு உடனடியாக ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.