சர்ச் கட்ட தொகுதி நிதி

ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாபட்லா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நந்திகம் சுரேஷ், அப்பகுதியில் கிறிஸ்தவ சர்ச் கட்ட தனது எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 40 லட்சம் வழங்கியுள்ளார். இதுகுறித்து அதே கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.பி. ரகுராம கிருஷ்ணம்ம ராஜு, மத்திய புள்ளியியல் மற்றும் திட்டமிடல் துறைக்கு புகார் அளித்தார். இதனையடுத்து, இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க, புள்ளியியல் துறை ஆந்திர மாநில தலைமை செயலருக்கு கடிதம் எழுதினார். ஆனால், அந்த கடிதத்திற்கு இதுவரை விளக்கம் வரவில்லை. இதனால், தற்போது மீண்டும் நினைவூட்டல் கடிதம் ஆந்திர தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி அக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.