கோயிலை ஆக்கிரமித்த கிறிஸ்தவர்கள்

ஈரோடு மாவட்டம் செல்லகுமாரபாளையம் அண்ணமார் கோயிலில் உள்ள சிலைகளை அகற்றி விட்டு கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தனர் சில மதம் மாறிய கிறிஸ்தவர்கள். இதனையடுத்து இந்துமுன்னணி போராட்டத்தை நடத்தி காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் கோயில் நிலத்தை மீட்டதுடன், அங்கிருந்து அகற்றப்பட்ட அண்ணமார் சிலையை அதே இடத்தில் நிறுவியது. பிறகு அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  இதேபோல, வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் ஒன்றியம் மசிகம் பஞ்சாயத்து சாரங்கல் பகுதியில் வசிக்கும் சில மதம் மாறிய கிறிஸ்தவர்கள், தங்கள் வீட்டுக்கு போக வர வழியில்லை எனகூறி அங்கிருந்த ஒரு கோயிலை இடிக்கப்போவதாக அடாவடி செய்தனர். மேலும், அக்கோயில் நிர்வாகிகளுக்கும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனையடுத்து வேலூர் இந்து முன்னணி அமைப்பினரும் அப்பகுதி மக்களும் மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பேர்ணாம்பட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.