கிறிஸ்தவ பாதிரி கைது

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே ஆண்டிச்சி ஊரணியை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியான ஜான் ராபர்ட், ராமேஸ்வரம் அருகே மண்டபம் அந்தோணியார் சர்ச் மற்றும் அருளானந்தர் சர்ச்சில் பாதிரியாக உள்ளார். கடந்த ஞாயிறன்று சர்ச்சுக்கு வந்திருந்த 3 சிறுமியர் மற்றும் திருமணமான இளம்பெண் ஒருவரிடம் அலைபேசி எண்களை வாங்கியுள்ளார் இவர். பிறகு, ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக சிறுமியருக்கு ஆபாச தகவல் அனுப்பியதுடன், திருமணம் செய்து கொள்கிறாயா? என, கேட்டுள்ளார். சர்ச்சில் சில பணிகள் இருப்பதாக கூறி அந்த மூன்று சிறுமியரை வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து, சிறுமியர் அளித்த புகாரையடுத்து பெற்றோர் பாதிரியை கண்டித்தனர். ஆனால், பாதிரியார் அதை பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, பெற்றோர் சிவகங்கை கத்தோலிக்க ஆயர் அலுவலகத்திற்கு புகார் அளித்தனர். வழக்கம்போல அவர்களும் ஜான் ராபர்ட் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து வேறு வழியின்றி பெற்றோர், ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் செய்தனர். விசாரனையில் சிறுமியருக்கு பாலியல் தொந்தரவு செய்தது உண்மை என, தெரிந்தது. ஆணையத்தின் புகாரின்பேரில் காவல்துறையினர் பாதிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.