கிறிஸ்தவ பாதிரி கைது

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 31 வயதுமிக்க பெண் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். ஏழ்மை காரணமாக இருவரும், பெரம்பூர் பரமசிவம் தெரு பகுதி சேர்ந்த கிறிஸ்தவ பாதிரி சேகர் கிருபாகரன் என்பவரின் வீட்டிற்கு வீட்டு வேலை செய்து வந்தனர். அப்போது பாதிரி சேகர் கிருபாகரன் அந்த 13 வயது சிறுமியை கவர்வதற்காக அவ்வப்போது புது ஆடைகள், பிரியாணி வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டிய பாதிரி, சிறுமியின் செல்போனில் ஆபாச படங்களையும் அனுப்பி வந்துள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இதனையடுத்து பாதிரி கிருபாகரனை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.