ஆம்னெஸ்டிக்கு தடை முதல்வர் கோரிக்கை

பாரதத்தின் ஜனநாயக கட்டமைப்பு மற்றும் அதன் தலைமைக்கு எதிராக ஆம்னெஸ்டி அமைப்பு நீண்ட நாட்களாக சதி செயலில் ஈடுபட்டு வருகிறது. நமது நாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுத்தவும், இடையூறு செய்யவும் முயலும் அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும். பாரதத்திற்கும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் அவதூறு ஏற்படுத்த இடதுசாரி பயங்கரவாதத்தை ஆம்னெஸ்டி ஆதரிப்பது அனைவருக்கும் தெரியும். இது சர்வதேச சதி. பாரதத்தில் வாழும் சமூகங்களுக்கு இடையே பிரிவு ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கம்’ என  அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா கூறினார்.