ஒரே இரவில் மாற்றம்

தமிழ்நாடு அரசின் TN 32 N 4251 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்தில் 13.08.2021 அன்று சாதாரண பேருந்தாக பயணித்தது. அதில் சேப்லா நந்தத்தில் இருந்து ஊ. மங்கலம் பயணிக்க ரூ. 7 கட்டணம் வசூலிக்கப்பட்டது. மறுநாள் 14.08.2021 அன்று, அதுவே விரைவுப் பேருந்தாக மாற்றப்பட்டு ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது என சமூக வலைத்தளங்களில் அந்த பேருந்து டிக்கெட்டின் புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகி உள்ளது. ஓ… இந்த 3 ரூபாய்தான் அந்த 3 ரூபாயா, இன்றிலிருந்து உன்னை விரைவுப் பேருந்தாக நியமிக்கிறேன் என தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் இந்த செயல் நெட்டிசன்களால் பரவலாக கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.