ராணுவ ஆட்சிக்கு அறைகூவல்

பிரான்ஸ் அதிபர் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் தோல்வி அடைந்தால் நாட்டை மீட்டெடுக்க அங்கு ராணுவ ஆட்சி தேவைப்படும் என பிரான்ஸின் ஒய்வு பெற்ற இருபது ஜெனரல்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். மேலும் சுமார் அயிரத்துக்கும் அதிகமான ராணுவம், ஜென்டர்மாரி மற்றும் காவல்துறை வீரர்கள் முன்னாள் ஜென்டர்மாரி அதிகாரியான ஜீன் பியர்ரே தலைமையில் கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். அதில் பிரான்ஸ் பேராபத்தில் உள்ளதாகவும், எங்கள் அழகான நாடு அழிவதை எங்களால் பார்த்து கொண்டு இருக்க முடியாது. எங்கள் அரசியல் சாசனத்திற்கு முரணாண செயல்களை நாங்கள் ஒய்வு பெற்றாலும் தடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது என குறிப்பிட்டு உள்ளனர். இந்த கடிதத்தில் பிரெஞ்சு தரைப்படையின் முன்னனி சிறப்பு படைப்பிரிவான பிரெஞ்சு பாரீன் லிஜியனுடைய முன்னாள் தளபதியான ஜெனரல் கிறிஸ்டியன் பிக்யெமால் முதல் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.