கேவியட் மனு

அக்னிபத் திட்டம் சட்டவிரோதம் எனக் கூறி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல் வழக்கறிஞர் ஹர்ஷ் அஜய் சிங் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், அக்னிபத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டங்கள் குறித்தும், அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கும் முன்பாக, தங்கள் தரப்பு விளக்கத்தையும் கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.