முன்னாள் ஆளுனர் மீது வழக்குப் பதிவு

உத்தரபிரதேச முன்னாள் ஆளுனர் அஜீஸ் குரேஷி, ராம்பூர் சட்டமன்ற உறுப்பினரும் சமாஜ்வாடி கட்சியின் சர்ச்சைக்குரிய தலைவர் அஸம் கானின் மனைவியுமான தன்சீம் பாத்திமாவை சந்தித்து பேசினார். அப்போது அங்கு அவர், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசை மிகவும் தரக்குறைவாகவும் இரு சமுகங்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கும் வகையிலும் பேசியுள்ளார். இதனையடுத்து ராம்பூர் மாவட்ட காவல் நிலையத்தில் பா.ஜ.க உறுப்பினர் ஆகாஷ் சக்சேனா புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், உத்தரபிரதேச முன்னாள் ஆளுனர் அஜீஸ் குரேஷி மீது அவதூறாக பேசுதல், தேசத்துரோகம் உள்ளிட்ட வழக்குகளை அம்மாநில காவல்துறையினர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.