பாலியல் தொல்லை பயிற்சியாளர் மீது வழக்குப்பதிவு

சென்னை அண்ணா நகரை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவர், கடந்த 2014ம் ஆண்டு முதல் சென்னையில் கெபிராஜ் என்பவர் நடத்தி வந்த தற்காப்பு பயிற்சியகத்தில் தான் சேர்ந்து பயிற்சி பெற்று வந்ததாகவும் ஜூடோ போட்டிக்காக நாமக்கல் சென்று திரும்பும் போது பயிற்சியாளர் கெபிராஜ் காரில் வைத்து பாலியல் தொந்தரவு செய்ததாகவும், ஒத்துழைப்பு தராததால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்துஅண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் கெபிராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.