சீன தடுப்பூசி தைவானுக்கு அழைப்பு

உலகின் மற்ற உலக நாடுகளை போலவே, தைவானும் கொரோனா நோய்தொற்றுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறது. தைவானின் 23.5 மில்லியன் மக்களில் 3% மட்டுமே குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை தயாரிக்கும் நாடுகள், பிற நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி உதவி செய்து வருகின்றன. அவ்வகையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தைவான் நாட்டு மக்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், தைவான், சீன தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளதோடு அவற்றைப் பயன்படுத்தவும் அனுமதிக்கவில்லை. அந்த நாட்டு மக்களும் சீன தடுப்பூசிகளை போட ஆர்வம் காட்டவில்லை. சீனாவின் திட்டங்கள் ஒரு சிலருக்கு வேண்டுமானால் கவர்ச்சிகரமானதாக இருக்கலாம், ஆனால் பலரால் செலவுகளைச் சமாளிக்க முடியாது என்பது பிரச்சினை என்று ஓரு தைவான் அதிகாரி கூறியுள்ளார். கடந்த மாதம் தைபேயின் தேசிய செங்கி பல்கலைக்கழகத்தின் கருத்துக் கணிப்பில், பெரும்பாலான மக்கள் சீன தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.