2டிஜி மருந்து தயாரிக்க அழைப்பு

மிதமானது முதல் சற்று தீவிர பாதிப்பு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு வழங்குவதற்காக, ‘2டிஜி’ என்ற தடுப்பு மருந்தை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ உருவாக்கியுள்ளது.  இந்த மருந்தை தற்போது அதிக அலவில் தயாரிக்க ஏதுவாக, மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு, டி.ஆர்.டி.ஓ அழைப்பு விடுத்துள்ளது. ‘இந்த மருந்தின் தொழில்நுட்ப தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும். அதிகபட்சம் 15 நிறுவனங்களுக்கு, மருந்து தயாரிக்க ‘லைசென்ஸ்’ வழங்கப்படும். அந்த நிறுவனங்கள் மாதத்துக்கு, 2,000 கிலோ மருந்து தயாரிக்கும் திறனை கொண்டிருக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.