சாமி சிலைகள் உடைப்பு

பீகாரில் பெட்டியா என்ற பகுதியில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில், அடையாளம் தெரியாத சிலர் அங்கு வைக்கப்பட்டிருந்த ராமர், சீதை சிலைகளை உடைத்துள்ளனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. கோயில் முன்பு திரண்ட பொதுமக்கள், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் செய்தனர். அப்பகுதியில் சமூக விரோதிகளின் நடமாட்டம் குறித்து புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என கோயில் அர்ச்சகர் தெரிவித்துள்ளார். ஒரு தனிக்குழு அமைத்து விசாரிக்கப்படுவதாகவும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் எஸ்.டி.பி.ஓ முகுல் பரிமல் பாண்டே தெரிவித்துள்ளார்.