கிருஷ்ணர் சிலை உடைப்பு

கோவை சாய்பாபா காலனி பாரதி பூங்காவில் இரண்டு அடி உயர கிருஷ்ணர் சிலை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அந்த சிலையை மர்ம நபர்கள் சிலர் இரவோடு இரவாக உடைத்துள்ளனர். காலை பூங்காவுக்கு சென்ற பொதுமக்கள், சிலை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த காவலர்கள், அருகே இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்தத் தகவல் பரவியதும், பா.ஜ.க, ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் பூங்காவில் திரண்டனர். பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் பூங்காவுக்கு சென்று உடைக்கப்பட்ட சிலையை பார்வையிட்டார். சம்பவ இடத்தில் இருக்கும் சி.சி.டிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் குற்றவாளியை கண்டறியும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.