மதரசாவில் சிறுவன் உயிரிழப்பு

ஹரியானா மாநிலத்தில் மசரோஃப் பிர் தாதா ஷா சௌக்கா அருகே அமைந்துள்ள மதரஸாவில் 11 வயது சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், சிறுவன் கொலை செய்யப்பட்டதாக அவனது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுவன் மதரஸாவில் சுமார் ஒரு வருடமாக படித்து வந்துள்ளான். மதரஸா தர்கா ஷா சௌகாவின் இயக்குனர் மௌலானா ஜாகிர், ‘மாலை தொழுகைக்கு வந்த சிறுவன், பிரார்த்தனையின் போது உடனிருந்தான். ஆனால் இரவு 7 மணிக்கு காணாமல் போனான். நாங்கள் அனைவரும் அவனைத் தேடினோம். கண்டுபிடிக்க முடியாததால் அவனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தோம். அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் மசூதிகளிலும் அவனை அனைவரும் தேடினர். பிறகு தேமஸ்ஜில் ஒரு அறையில் கிரஷரின் கீழ் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டான்’ என்று கூறினார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.