கோயிலில் போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் உள்துறை செயலர் பிரீதி படேல் ஆகியோர் வடக்கு லண்டனில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் கோயிலுக்குச் சென்று, தீபாவளி பண்டிகையை அங்குள்ள ஹிந்துக்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தினருடன் இணைந்து கொண்டாடினர். போரிஸ் ஜான்சன் கோயிலில் மாலைகளை அணிவித்து ஹிந்து பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டார். கோயிலின் கருவறையில் பூஜை செய்வதற்காக ஜான்சன் ஒரு பழக்கூடையை வழங்கினார். அதற்கு பிறகு, அங்குள்ள துறவி மஹந்த் ஸ்வாமி மஹாராஜ் உடன் இணைந்து சுவாமி நாராயண் கோயில் உலகளாவிய கொரோனா தொற்றின்போது செய்த நிவாரணப் பணிகளை குறித்த புகைப்பட கண்காட்சிகளை பார்வையிட்டு, ‘நீங்கள் செய்த சேவைகள் மகத்தானது’ என பாராட்டி பேசினார்.