முஸ்லிம் இளைஞர்களுக்கு வெடிகுண்டு பயிற்சி

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) பயங்கரவாத அமைப்புக்கு மத்திய அரசு, ஐந்து ஆண்டு கால தடை விதித்துள்ளது. இதையடுத்து, நாடு முழுதும், என்.ஐ.ஏ அதிகாரிகள், பி.எப்.ஐ நிர்வாகிகள் வீடு, அலுவலகங்களில் பலமுறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பலர் கைது செய்யப்பட்டு உள்ளதுடன் ஏராளமான முக்கிய ஆவணங்கள், பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவ்வகையில், சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 11 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் கூட்டாளிகள் தொடர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இரு தினங்களுக்கு முன் சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஆறு இடங்களில் மீண்டும் ஒரு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் முகமது அப்பாஸ், முகமது யூசுப் உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து தெரிவித்த என்.ஐ.ஏ அதிகாரிகள், ‘பாரதத்தில் 2047ம் ஆண்டுக்குள், இஸ்லாமிய நாடு அமைப்பதே இவர்களின் நோக்கம் .இதற்கு தடையாக உள்ள ஹிந்து தலைவர்களை கொலை செய்ய வேண்டும், ஹிந்து கோவில்களை தகர்க்க வேண்டும் என்பது இவர்களது சதித் திட்டம். இதற்காக, மாவட்ட வாரியாக ஆட்களை நியமித்து முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்துள்ளனர். பின்னர், அவர்களை ஐந்து பேர் அடங்கிய குழுக்களாகக பிரித்துள்ளனர் அதில் ஒருவர் வழி நடத்தும் பொறுப்பை ஏற்பார். அவர் சொல்லுக்கு மற்றவர்கள் கட்டுப்பட வேண்டும் அவர்களுக்கு சதி திட்டம் தீட்டிக்கொடுக்க, மண்டல அளவில் பொறுப்பாளர்கள் உள்ளனர். முஸ்லிம் இளைஞர்களுக்கு தற்காப்பு ஆயுத பயிற்சி அளிப்பதே அவர்களது வேலை. இவர்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு குறுகிய நேரத்தில் வெடிகுண்டு தயாரிப்பது, அவற்றை எப்படி வெடிக்கச் செய்வது உள்ளிட்ட பயிற்சிகளை அளித்துள்ளனர். மேலும், பயங்கரவாத செயலுக்கு தயார்படுத்தப்பட்ட இந்த இளைஞர்களுக்கு காவல்துறையினரிடம் இருந்து எப்படி தப்பிப்பது, கொலை பட்டியலில் உள்ள ஹிந்து தலைவர்களை கண்காணிப்பது, அவர்களின் உயிருக்கு குறி வைத்து திட்டமிட்டு எப்படி செயல்படுவது குறித்தும் பயிற்சி அளித்துள்ளனர். இவர்களுக்கு, சில முக்கிய பெரும் புள்ளிகள் பண உதவி செய்து வந்தனர்’ என்பதை கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்ததாக கூறினர்.