குண்டு வெடிப்பு குற்றவாளிகள் கைது

ஜனவரி 29, 2021 அன்று டெல்லியின் மையப்பகுதியில், உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே ஒரு ஐ.இ.டி குண்டுவெடிப்பு நடந்தது. இதில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை, எனினும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து கார்கள் சேதமடைந்தன இந்த குண்டுவெடிப்புத் தொடர்பாக கார்கில் பகுதியை சேர்ந்த நாசீர் உசேன், சுல்பிகர் அலி வாஜீர், அயாஸ் உசேன், முசாம்மில் உசேன் ஆகிய நான்கு இளைஞர்களை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த நான்கு பேரை காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ விரைவில் நடவடிக்கை எடுக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.