பழி தீர்க்கப்பட்ட பயங்கரவாதிகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன், அப்பாவி பொதுமக்கள், ஹிந்துக்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தொழில் முனைவோர் என பலரை பயங்கரவாதிகள் கொன்றனர். இதனையடுத்து பாதுகாப்பு படைகள் தங்களது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தின. இதனால் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் கட்டுபடுத்தப்பட்டன. பாதுகாப்பு படைகளின் துணிச்சலான அதிரடி நடவடிக்கைகள் காரணமாக இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உளவு சார்ந்த நடவடிக்கைகளும் அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பயங்கரவாதிகளின் கட்டமைப்புகள் பலவீனப்படுத்தப்பட்டு வருகின்றன.