பா.ஜ.கவில் இணைந்த நீதிபதி, டிஜிபி

ஓய்வுபெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பி.என். ரவீந்திரன், முன்னாள் டி.ஜி.பி வேணுகோபாலன் நாயர் ஆகியோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். கொச்சியில் திருப்புனித்துராவில் நடந்த பா.ஜ.கவின் ‘விஜய யாத்திரையின்’போது அவர்கள் முறைப்படி கட்சியில் இணைந்தனர். எதிர்வரும் நாட்களில், இவர்களை போலவே பல புதியவர்களும், மாற்று கட்சியினர் பலர் அவர்களின் கட்சிகளில் இருந்தும் விலகி பா.ஜ.கவில் இணையப்போவதாக அம்மாநில பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் கூறியுள்ளார்.