பா.ஜ.க கவுன்சிலரின் துரித நடவடிக்கை

கேரளா வடகரை ரயில் நிலையத்தின் அருகில் தண்டவாளத்தில் ஒரு தென்னை மரம் விழுந்து கிடப்பதாக இரவு 8 மணிக்கு அப்பகுதி பா.ஜ.க கவுன்சிலர் பி.கே சிந்துவுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அதி விரைவாக செயல்பட்டு டார்ச் லைட், சிகப்பு துணிகளுடன் சென்று அப்பக்கமாக வந்த மங்களூர் செல்லும் மாவேலி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தினார். தன்னுடன் வந்தவர்களைக் கொண்டு அதிவேகமாக மரத்தை வெட்டி அகற்றியும்விட்டார். அவரது துரித நடவடிக்கையின் காரணமாக மிகப்பெரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டதுடன் ரயிலும் அரைமணி நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.