பி.எப் பணத்தில் கையாடல் செய்த பிஷப்

கோவை சி.எஸ்.ஐ., திருமண்டல கட்டுப்பாட்டிலுள்ள சர்ச்சுகளில் பணியாற்றும் பாதிரிகள், ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியில், 25 கோடி ரூபாயை மோசடி செய்யப்பட்டதாக, பாதிரி ஜெரோம் ஜேக்கப்பால் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, பிஷப் திமோத்தி ரவீந்தர், ஆலோசகர் டேவிட் மங்கள் தாஸ், செல்வகுமார், முன்னாள் செயலாளர் சார்லஸ் சாம்ராஜ் ஆகியோர் மீது குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். முன்ஜாமின் கோரி, மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், நான்கு பேரும் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமீன் மனு மீதான விசாரணையை, ஜூலை 9க்கு தள்ளிவைத்தார். அதுவரை, நான்கு பேரையும் கைது செய்யகூடாது என்றும் உத்தரவிட்டார்.