உ.பியில் ஆலை அமைக்கும் பிர்லா

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்றாக, அம்மாநிலத்தில் தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் அம்மாநிலம், தொழில் துவங்க உகந்த மாநிலங்கள் வரிசையில் தற்போது 2ம் இடத்திற்கு வேகமாக முன்னேறியுள்ளது. உ.பியில் ராணுவ தளவாட தயாரிப்பு தொழிற்சாலை வழித்தடத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டன. தற்போது, ஆதித்திய பிர்லா நிறுவனம் 700 கோடி முதலீட்டில் தனது பெயிண்ட் உற்பத்தி தொழிற்சாலையை ஆரம்பிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்களால் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.