மதமாற்ற கும்பலுக்கு விபூதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ரிஷிவந்தியத்தில் உள்ள ஹிந்துக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவதற்காக, நேசிக்கின்ற கொலைகாரன்,தெய்வ சத்தம் என்ற தலைப்பில் துண்டு நோட்டீஸ்களை வழங்கி மதமாற்றத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு சென்ற இந்து முன்னணி அமைப்பினர், இதனை கண்டித்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, மதமாற்றம் செய்யவந்த கிறித்தவர்களின் நெற்றியில் இந்து முன்னணி அமைப்பினர் விபூதியை பூசினர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மதமாற்ற கும்பலின் தகவல்களை பெற்றுக்கொண்டு புகைப்படம் எடுத்து விசாரித்து அனுப்பினர்.