ராகுலுக்கு பினராயி கேள்வி

அண்மையில் வயநாடு தொகுதிக்கு வந்திருந்த தன் எம்.பி. ராகுல், அங்கு விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டர் பேரணியில் பங்கேற்றார். அங்கு அவர் பேசுகையில், ‘ஏழை மக்களின் நலனுக்கான திட்டங்களை, கேரள இடதுசாரி அரசு செயல்படுத்தவில்லை. செங்கொடி கையில் இருந்தால் எவ்வளவு தங்கம் வேண்டுமென்றாலும் கடத்தலாம்’ என்று ஆளும் கம்யூனிச அரசை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதில் அளித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘காங்கிரஸ் எம்.பி. ராகுல், கேரளாவுக்கு வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது போல பேசுகிறார். மீனவர்களுடன் கடலுக்குச் செல்கிறார். ஆனால், டெல்லியில் பல நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அதை பற்றி பேசாமல் புறக்கணித்துள்ளார். டெல்லியில் போராடாமல் கேரளாவில் விவசாயிகளுக்காக குரல் கொடுக்கிறார். இது விநோதமாக உள்ளது’ என்று ராகுலை கிண்டலடித்துள்ளார்.