13 மடங்கு வளர்ச்சி பெறும் பாரதம்

குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் உள்ள பண்டிட் தீன்தயாள் எனர்ஜி பல்கலைக் கழகத்தின் 10ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “பாரதம் வளர்ச்சியை நோக்கி முன்னேறி சென்று கொண்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சியும் வாய்ப்புகளும் தற்போது ஏற்பட்டுள்ளது. பாரதம் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் காலகட்டத்தில், பொருளாதார வளர்ச்சியில் பாரதம் பல்வேறு வியத்தகு மாற்றங்களை காணும், பெரிய வளர்ச்சியை எட்டும். தற்போது 3 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை கொண்டிருக்கும் நமது நாடு, 2047க்குள் 13 மடங்கு அதிகரித்து, 40 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்ச்சி அடையும். பொருளாரத்தில் உலகின் முதல் மூன்று இடங்களுக்குள் பாரதம் இடம்பெறும். பயோ எனர்ஜி புரட்சி, டிஜிட்டல் புரட்சி, கிளீன் எனர்ஜி புரட்சி ஆகிய மூன்றும் வருங்காலங்களில் பாரதத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும். இந்த மூன்று புரட்சிகளும், நம்முடைய பூமியை காலநிலை நெருக்கடிகளில் இருந்து காப்பாற்ற உதவும்” என நம்பிக்கை தெரிவித்தார்.