ராமாயணா யாத்திரையில் பத்ராச்சலம்

இந்திய ரயில்வேத் துறையின் ஐ.ஆர்.சி.டி.சி நடத்திவரும் ராமாயணா சுற்றுலா யாத்திரையில், தெலுங்கானாவில் உள்ள பத்ராச்சல ராமர் கோயிலும் சேர்க்கப்பட்டு உள்ளது. பத்ராசலத்தையும் இதில் இணைக்க வேண்டும் என்ற தெலுங்கு பேசும் மக்களின் பரவலான கோரிக்கையை ஏற்று அதனை பரிசீலிக்க பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சருக்கு அறிவுறுத்தினார். இதனையடுத்து பத்ராச்சலம் இந்த சுற்றுலாவில் இணைக்கப்பட்டது. இதற்கு மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டியும் தெலுங்கு பேசும் மக்களும் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.