தடை போட்ட தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண் குழந்தைகள் 6ம் வகுப்புக்கு மேல் கல்வி கற்பதற்கு தடைவிதிக்கப்பட்டது சர்வேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தடையை திரும்ப பெறக்கோரி உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தாலும் தலிபான்கள் அதை காதில் போட்டுக்கொள்வதாக இல்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்பதற்கும் தற்போது தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். கல்விக்காக கஜகஸ்தான், கத்தார் போன்ற நாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்துக்கு வந்த மாணவிகளை தலிபான்கள் திருப்பி அனுப்பி விட்டனர். மாணவர்களை மட்டும் விமானத்தில் பயணிக்க அனுமதித்தனர்.