பஜாஜின் பச்சைப் பொய்கள்

காங்கிரசுக்கு நெருக்கமானவர், ராகுலின் நம்பிக்கைக்கு உரியவர்  என அறியப்படுபவர் தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ். இவர் சமீபத்தில் என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில் பாரதத்தை குறித்தும் மத்திய அரசு குறித்தும் விஷம் தோய்ந்த  கருத்துகளை கக்கியுள்ளார். பட்ஜெட் குறித்த விவாதத்தில் அவர் ‘பாரத மக்கள் ஏராளமானவர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள், அறிவற்றவர்கள், ஒழுங்கற்றவர்கள்’ என சொந்த தேசத்து மக்களையே கொச்சைப்படுத்தி கருத்து கூறினார். மேலும், கொரோனவுக்காக செய்யப்பட்ட பொதுமுடக்கம் தவறானது. நமது தேசம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகள் அவசரமாக தயாரிக்கப்பட்டது, அவை பாதுகாப்பானது இல்லை என தன் காங்கிரஸ் விஸ்வாசத்தை பறைசாற்றினார்.