ஆயுஷ் 64 மருந்து இலவசம்

மத்திய ஆயுஷ் அமைச்சகம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு, ‘ஆயுஷ்- 64’ என்ற, மருந்தை சேவாபாரதிஇலவசமாக வழங்குகிறது.இந்த மருந்தை அறிகுறியற்றவர்கள், லேசான மற்றும் மிதமான தொற்று உள்ளவர்கள் எடுத்து கொள்ளலாம். தொற்று பாதித்த ஏழு நாட்களுக்குள் இம்மருந்தை எடுத்து கொள்ளலாம்.அலோபதி மருந்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.இந்த மருந்தை, சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டு தனிமையில் இருப்போர் சேவாபாரதி தொண்டர்களிடம் இலவசமாக பெறலாம்.இதற்காக, 32 இடங்களில் சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது.இம் மருந்தை பெற நோயாளியின் பெயர், வயது, பாலினம், முகவரி, ஆதார் நகல், பராமரிப்பாளர் பெயர், மொபைல் போன் எண், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை நகல் விபரங்களுடன் நேரில் சென்று வாங்கி கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 98408 79433 அல்லது 73050 87893 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.