வீரர்களுக்கு விருதுகள்

பாரதத்தின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள காவல்துறை, பாதுகாப்புப் பிரிவுகள் உள்ளிட்ட துறைகளை சேர்ந்தவர்களில் 1,380 பேர் இவ்வாண்டுக்கான வீர, தீர செயலுக்கான விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 23 பேர் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தை எதிர்த்துப் போரிட்ட 20 பேர் இதில் அடங்குவர். இந்தோ திபெத்திய எல்லை காவல் படையில் இவ்வளவு அதிகமான வீரர்கள் பதக்கங்களை பெறுவது இதுவே முதல் முறை. மேலும், நக்சலைட் ஒழிப்பில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் காவல் படையின் சிறப்புப் பிரிவான கோப்ரா கமாண்டோ படைப் பிரிவை சேர்ந்த மூன்று வீரர்கள்,  மேஜர் அருண் குமார் பாண்டே, மேஜர் ரவி குமார் சவுத்ரி, கேப்டன் விகாஸ் கத்ரி, ரைபிள்மேன் முகேஷ் குமார் உள்ளிட்டோருக்கு சௌரிய சக்ரா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.