பராசரனுக்கு விருது

சனாதன தர்மத்தை நிலைநிறுத்தும் பொருட்டு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் வாதாடி வெற்றிபெற்ற மூத்த வழக்கறிஞர் பத்மவிபூஷன் K.பராசரனுக்கு ஐயப்ப ரத்னா விருது  வழங்கி, அவருடைய சேவையை சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் பாராட்டி கௌரவித்தது. அயோத்தி ராமஜென்மபூமி வழக்கிலும், சபரிமலை கோயிலுக்கு இளம் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கிலும் இவருடைய சிறப்பான வாதங்களைதான் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலை பாதுகாப்பு இயக்கம் தேசிய துணை தலைவர் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, டாக்டர். ஜெய் சந்திரன், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் தேசீய பொதுச் செயலாளர் ஈரோடு ராஜன், வடதமிழகம் மற்றும் புதுச்சேரி அமைப்பு செயலாளர் துரைசங்க, உள்ளிட்டோர் பராசரனை அவருடைய இல்லத்தில் சந்தித்து, அவருடைய மகத்தான சேவையை பாராட்டி விருது வழங்கி கௌரவித்தனர்.