பாரத வம்சாவளி மாணவருக்கு விருது

அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (இ.பி.ஏ), ஆண்டுதோறும், சிறந்த சுற்றுச்சூழல் சார்ந்த இளம் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு சுற்றுச்சூழல் இளைஞர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இவ்வாண்டுக்கான விருது சோஹி சஞ்சய் படேல் என்ற இந்திய வம்சாவளி மாணவருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பஞ்சுகளை உருவாக்கி உள்ளார். வீடுகளின் சுவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பஞ்சுகள், தீயை பரவ விடாமல் தடுக்கும் திறனுடையது.