ஔவையார் விருது

சிறந்த சமூக சேவையாற்றியதற்காக தமிழக அரசு சார்பில் சக்தி மசாலா நிறுவனர் சாந்தி துரைசாமிக்கு, ஔவையார் விருது வழங்கப்பட்டது. கடந்த 1977ல், 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் சக்தி மசாலா நிறுவனத்தை துவக்கினார் சாந்தி துரைசாமி. 1977ல் சமூக சேவை செய்ய சக்தி தேவி தொண்டு அறக்கட்டளையை துவக்கினார். மேலும், உடல், மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க சக்தி மறுவாழ்வு மையம், சக்தி மருத்துவமனை மூலம் 10 மருத்துவர்களைக் கொண்டு 15 கிராம மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள், கொரோனா, வெள்ள பாதிப்பு உள்ளிட்டவற்றிற்கு தாராளமாக நிதி அளிப்பது என பல்வேறு தொண்டு பணிகளை அவர் செய்து வருகிறார். மாநில அரசின் ஔவையார் விருதுத் தவிர பல்வேறு விருதுகள், கௌரவ டாக்டர் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.