ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல்

அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலமாக ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த வடக்கு அமெரிக்க ஹிந்துக்கள் கூட்டமைப்பு சார்பில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நெட்வொர்க் கன்டேஜியன் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை அறிவியல் அதிகாரி ஜோயல் பின்கெல்ஸ்டீன், ‘உலகம் முழுதும் மத மோதல்கள் உள்ளிட்டவை தொடர்பாக எங்களுடைய அமைப்பு ஆய்வு செய்தது. இதில், ‘ஹிந்துபோபியா’ எனப்படும் ஹிந்துக்களுக்கு எதிரான மனநிலை தற்போது உலகெங்கும் பரவியுள்ளது தெரியவந்து உள்ளது. அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகளில் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்துள்ளது. இது சமூக வலைதளங்களிலும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் இத்தகைய தாக்குதல்கள் 1,000 மடங்கு அதிகரித்து உள்ளது. அமெரிக்க உளவு அமைப்பான எப்.பி.ஐ அமைப்பின் புள்ளிவிபரங்களின்படி அமெரிக்காவில் மட்டும் 2020ல் ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்பு சம்பவங்கள் 500 மடங்கு அதிகரித்து உள்ளது” என கூறியுள்ளார்.