ஹிந்துக்கள் மீது தாக்குதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சில நாட்களுக்கு முன் நடந்த போட்டியில், பாகிஸ்தானை பாரதம் வீழ்த்தியது. இதை தொடர்ந்து இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் உள்ள பெல்கிரேவ் வழியாக நூற்றுக்கணக்கான பாரத வம்சாவளி மக்கள் பிரதான சாலையில் இதனை கொண்டாடினர். அப்போது, இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம்கள் அந்த மக்களை, குறிப்பாக அதில் உள்ள ஹிந்துக்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். பல ஹிந்துக்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதுகுறித்த வீடியோக்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அங்கு  தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், நிலைமையைக் கட்டுப்படுத்த உள்ளூர் காவல்துறையினர் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வீடியோ காட்சிகளின் அடிப்படையில் தேடுதல் வேட்டையையும் நடத்தி வருகின்றனர். ஆனால், இங்கிலாந்தில் உள்ள எந்த ஒரு முக்கிய ஊடகமும் இந்த செய்திகளை வெளியிடவில்லை. இதைவிட மோசமாக, ஹிந்துக்கள் தான் முஸ்லிம்களை பயமுறுத்துவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு தங்களின் இடதுசாரி மனோபாவத்தை வெளிப்படுத்தின.