கலை இயக்குனர் மீது தாக்குதல்

கேரள திரைப்பட கலை இயக்குநரான அர்கான் எஸ் கர்மா, சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது காரில் தேசியக் கொடியை பொருத்திச் சென்றார். அப்போது, கொல்லம் மாவட்டம், பள்ளிமுக்கில் உள்ள NH-64 தேசிய நெடுஞ்சாலையில் மர்ம நபர்கள் நான்கு பேர் அடங்கிய ஒரு கும்பல், இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்து, அவரின் காரை வழி மறித்து நிறுத்தியனர். “எங்கள் பகுதிக்குள் மூவர்ணக் கொடியுடன் நுழைந்த உனக்கு எவ்வளவு தைரியம்?” என கேட்டு, அவரை காரை விட்டு வெளியே இழுத்து கடுமையாக தாக்கினர். சட்டையை கிழித்தனர். கற்களாலும் அவரை தாக்கி காயப்படுத்தினர். அதில் ஒருவர் கர்மாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார். மர்ம நபர்களின் கொடூர தாக்குதலால் கடுமையாக காயமடைந்த அர்கான் எஸ் கர்மா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இது சம்பந்தமாக இரண்டு நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.