விமானப்படை தளத்தில் தாக்குதல்

ஜம்முவில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில், நேற்று அதிகாலை 2 மணியளவில் சக்தி குறைந்த ஒரு குண்டு விமானப்படை அலுவலகத்தின் மேல் தளத்திலும் மற்றொரு குண்டு திறந்தவெளியிலும் வெடித்தது. அதிர்ஷ்டவசமாக பாதிப்போ காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. டுரோன் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தேசிய வெடிகுண்டுத் தகவல் மைய நிபுணர்கள், தடயவியல் அதிகாரிகள் அங்கு விசாரணை செய்து வருகின்றனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை அதிகாரிகளிடம் இச்சம்பவம் தொடர்பாக கேட்டறிந்தார்.