திருச்சியில் ஏபிவிபி அலுவலகம் மீது தாக்குதல்

திருச்சியில் உள்ள அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அலுவலகத்துக்குள் நேற்று (22-10-2021) இரவு சமூக விரோதிகள் சிலர் புகுந்து, வன்முறையாட்டம் நடத்தினார்கள். மாணவர் அமைப்பின் வளர்ச்சியைக் கருத்தில் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

ஏபிவிபி அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து, திருச்சியிலும் மதுரையிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் ஏபிவிபி தேசிய செயலாளர் லி.முத்துராமலிங்கம், தென் தமிழக மாநில செயலாளர் சுசிலா உள்ளிட்ட பொறுப்பாளர்கள் புகார் அளித்தார்கள்.