புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி

தமிழகத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக, தொழிலாளர் நலத்துறை சார்பில், கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக சொந்த மாநிலங்களுக்கு செல்ல அவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அதை தவிர்க்கவும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவவும் தொழிலாளர் நலத்துறை, கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளது. சென்னை: 044 – 24321438, 24321408, 9444200470, 9841016277, 9840113313, 9840432526. திருவள்ளூர்: 9442832516, 9597577599. காஞ்சிபுரம்: 9840090101, 9677829007. செங்கல்பட்டு: 9940856855, 9952639441. சேலம்: 9489214157, 9994815489. கோவை: 9941121001, 9566062596. திருப்பூர்: 9789723235, 9894257543. கிருஷ்ணகிரி: 9842908287, 9443476756. திருநெல்வேலி: 9965711725, 9442114011 என மாவட்டவாரியாக அதற்கு தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை, கட்டுப்பாட்டு அறைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.