ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் படுகொலை

கேரளாவின் பாலக்காடு அருகே மம்பரத்தில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் சஞ்சித் (வயது 27) என்பவரை நேற்று காலை காரில் வந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஜிஹாதி கும்பல் அவரின் வாகனத்தை இடித்துத் தள்ளி அவரின் மனைவியின் கண் எதிரிலேயே வெட்டி படுகொலை செய்துள்ளது.ன் சஞ்சித் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் எலப்புள்ளி பகுதியின் பௌதிக் பிரமுக்காக இருந்து தேசப்பணியாற்றினார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில், அவர்களது ஆதரவுடன் முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளின் வன்முறை வெறியாட்டம் தழைத்தோங்கி வளர்கின்றன என்பதற்கு இது மற்றொரு உதாரணம்.