முன்னுதாரணமான அஸ்ஸாம்

மாநிலத்தில் கல்வியை வளர்க் கும் பொருட்டு, ஒரே நேரத்தில், ஆசிரியரின் தகுதித் தேர்வில் தகுதி பெற்ற ஆசிரியர்கள் 29,701 பேருக்கு பள்ளி ஆசிரியர் நியமனக் கடிதங்களை வழங்கியதன் மூலம் அஸ்ஸாம் அரசு தேசத்தில் ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளது. ஒரே நாளில், 16484 ஆசிரியர்களுக்கு நேரடியாக தங்கள் பணி  நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும் 13,217 ஆசிரியர்களுக்கு இணையம் வழியாக நியமனங்கள் வழங்கப்பட்டன. 50 ஆயிரம் ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக சுதந்திர தின உரையில் முதல்வர் சர்பானந் சோனாவால் அறிவிப்பு வெளியிட்டார். அவை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  இதனால்  ஆசிரியர்களின் பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்கள் அனைத்தும் வெளிப்படையான முறையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.