மத மாற்றக் குற்றச்சாட்டில் கைது

உத்தரப் பிரதேசத்தில் மவு மாவட்டத்தில் சமீபத்தில் 50 பேரை உத்தரப்பிரதேச காவல்துறையினர் மத மாற்றம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்தனர். நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு சிகிச்சை செய்வதற்காவும், சமூக பிரார்த்தனை என்ற பெயரிலும் மதமாற்றத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆபிரகாம் என்ற ஒரு பாதிரி, கடந்த ஐந்து ஆண்டுகளாக இத்தகைய பிரார்த்தனை கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறார் என காவல்துறைக்கு புகார் வந்தது. இத்தகவலை ஹிந்து ஜாக்ரான் மஞ்சின் மாவட்டப் பொறுப்பாளர் பானு பிரதாப் சிங்கும் உறுதி செய்தார். இதனை விசாரித்த உ.பி காவல்துறை புகாரில் உண்மை இருந்ததையடுத்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.