மக்பூல் ஷெர்வானிக்கு ராணுவம் மரியாதை

மக்பூல் ஷெர்வானி என்ற காஷ்மீர் இளைஞர், 1947ல் பாகிஸ்தான் பழங்குடியினர் காஷ்மீரை கைப்பற்ற முன்னேறுவதை தடுக்கவும் உள்ளூர் மக்கள் அவர்களை எதிர்த்து போராடவும் ஊக்கமளித்தார். விமானப்படை தளத்தை அந்த பயங்கரவாதிகள் ஆக்கிரமிக்காமல் தடுக்க அவர்களை தவறாக வழிநடத்தி தாமதம் செய்தார். இதனால் அவர்கள் அவரை சித்ரவதை செய்து கொன்றனர். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சமீபத்தில் அவரின் கல்லறையை புதுப்பித்து அங்கு அவருக்காக தொழுகை நடத்த ஏற்பாடு செய்தது நமது பாரத ராணுவம்.